சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து அருகே இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்தனர்.
பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, வெடி
விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில், சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு அடுத்த நாள் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி கிராமத்தில் ராஜூ என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
வேதிப்பொருட்கள் ரசாயன மாற்றம் ஏற்பட்டு திடீரென வெடித்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பட்டாசு ஆலையில் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் நடந்து ஒரே மாதத்திற்குள் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் மற்றொரு பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story