மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று சென்னை வருகை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Feb 2021 1:58 AM GMT (Updated: 27 Feb 2021 1:58 AM GMT)

2 நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார்.

விழுப்புரம், 

2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித் ஷா டெல்லியில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு சென்னை வர உள்ளார். காரைக்கால் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

விழுப்புரம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் முருகன் தலைமை தாங்குகிறார். மேலிட பொறுப்பாளர் ரவி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு மக்களிடத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் நாளை காலை காரைக்காலில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதியம் 1.30 மணியளவில் விழுப்புரம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் தனியார் கல்லூரிக்கு சென்று அங்கு கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். அதன் பின்னர் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளார். 

விழுப்புரத்திற்கு அமித்ஷா வருகையையொட்டி ஏராளமான போலீசாரும், டெல்லி பாதுகாப்பு படையினரும், கியூ பிரிவு போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story