தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக - பாமக பேச்சுவார்த்தை


தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக - பாமக பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 27 Feb 2021 6:46 AM GMT (Updated: 27 Feb 2021 6:46 AM GMT)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக-பாமக இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

சென்னை, 

சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக-பாமக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையே பாமகவின் நீண்ட கால கோரிக்கையான வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அதிமுக-பாஜக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதில் பாஜகவுக்கு 30 தொகுதிகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   


Next Story