மார்ச் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Feb 2021 7:14 AM GMT (Updated: 27 Feb 2021 7:14 AM GMT)

மார்ச் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் 02-03-2021 முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்த உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும். தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும். குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் மட்டும் வர வேண்டும். நேர்காணலுக்கு வருபவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பரிந்துரையாளர்களை அழைத்து வர அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Next Story