அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு: ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு


அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு:  ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 2:09 PM GMT (Updated: 27 Feb 2021 2:09 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெறும்.  ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இதனை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்கி உள்ளன.

இதற்கிடையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் முடிவில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.  ஒப்பந்தத்தின்படி பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதால், தொகுதிகளை குறைத்து கொண்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story