இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் - காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா


இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் - காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா
x
தினத்தந்தி 28 Feb 2021 8:16 AM GMT (Updated: 28 Feb 2021 8:16 AM GMT)

இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 

அப்போது பேசிய அவர், “காங்கிரசில் குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி தானாகவே கவிழ்ந்து விட்டது. பொய் சொல்பவர் விருது கொடுக்க வேண்டுமானால் அது நாராயணசாமிக்குத்தான் தர வேண்டும். புதுச்சேரி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும். புதுச்சேரி இளைஞர்களில் 75% வேலையற்றவர்கள், நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு வாக்களித்தால், நாங்கள் வேலையின்மை விகிதத்தை 40% க்கும் குறைப்போம்

புதுச்சேரியில் ஊழலை வளர்க்கும் வேலையை மட்டுமே நாராயணசாமி செய்தார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் இருந்ததற்கு நாராயணசாமிதான் காரணம். புதுச்சேரிக்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை காங்கிரஸ் தலைமையிடம் கொண்டு சேர்த்தார் நாராயணசாமி. வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையும். காங்கிரசில் தகுதிக்கு இடமில்லை என்பதால் புதுச்சேரியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவில் வந்து சேருகிறார்கள். 

சில நாட்களுக்கு முன்பு, ராகுல் காந்தி ஏன் மீன்வளத்துறை இல்லை என்று கேட்டிருந்தார். மீன்வளத் துறை 2 ஆண்டுகளாக (2019 முதல்) உள்ளது என்பதை அறியாத ஒரு தலைவரை அவர்கள் விரும்புகிறார்களா என்பதை நான் மக்களிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Next Story