ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல்காந்தி


ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 28 Feb 2021 6:08 PM GMT (Updated: 28 Feb 2021 6:08 PM GMT)

74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் என்று ராகுல்காந்தி கூறினார்.

திருநெல்வேலி,

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி திருநெல்வேலி மாவட்டத்தில் அருகில் உள்ள ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குடி உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில திறந்த வாகனத்தில் இருந்தவாறு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,

 74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை குறிப்பிட்ட அவர், அதேபோன்று பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் என தெரிவித்தார்.

மேலும் கல்வி, சுகாதாரத்தை பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என  வலியுறுத்தினார். சிறு மற்றும் குறுந் தொழில்களின் முதுகெலும்பை ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் முறித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

பிரசாரத்தின் போது, கடைக்கு சென்று தேநீர் அருந்திய அவர், அங்கிருந்த சிறுமியுடன் சிறிது நேரம் உரையாடினார். பாவூர்சத்திரம் பகுதியில் ஆதரவு திரட்டிய ராகுல்காந்தி, காரில் இருந்து இறங்கி சாலையோர வியாபாரியிடம் இளநீர் வாங்கி அருந்தினார். அப்போது, அவரிடம் வருவாய், குடும்ப சூழல் மற்றும் குழந்தைகளின் கல்வி செலவு ஆகியவற்றை கேட்டறிந்தார்.

Next Story