தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் பிருந்தாகாரத் பேச்சு
மக்கள் நலனுக்காக செயல்படும் தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் பிருந்தாகாரத் பேச்சு.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்துக்கு தேவையான நலத்திட்டங்களை கேட்டு பெறாமல் இருப்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு வாய்ப்பூட்டு போட்டுள்ளது. அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகள் டெல்லியில் போராடியபோது, அவர்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காமல் வாய்ப்பூட்டு போட்டு கொண்டது. மத்திய பா.ஜனதா அரசு சொல்லாமல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வாய் திறந்து பேச முடியாது.
எனவே, தமிழக மக்கள் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும். மக்கள் நலனுக்காக செயல்படும் தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story