14 கிராமங்களில் நிலங்களை பத்திரப்பதிவுக்கு தடை ஆணை பிறப்பிப்பதா? மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கண்டனம்


14 கிராமங்களில் நிலங்களை பத்திரப்பதிவுக்கு தடை ஆணை பிறப்பிப்பதா? மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 4 March 2021 1:10 AM GMT (Updated: 4 March 2021 1:10 AM GMT)

கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றி உள்ள 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப்பதிவுக்கு தடை ஆணை பிறப்பிப்பதா? மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கண்டனம்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணுமின்நிலையம் அமைந்துள்ளது. அந்த அணுமின்நிலையத்தைச் சுற்றிலும் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், கல்பாக்கம், மணமை, குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமைப்பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம் ஆகிய 14 கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், வீட்டுமனைகள் உள்ளன. இந்த மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரம் சார்ந்த நிகழ்வுகளும் சரியாக சென்று கொண்டிருந்த சூழலில் தான், இந்த 14 கிராமங்களிலும் உள்ள எந்த வகை நிலங்களையும் பத்திரப்பதிவு செய்வதற்கு மத்திய அரசு தடையாணை பிறப்பித்துள்ளது. இதற்காக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள காரணம் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

அணுமின்நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அது உண்மை என்றால், 14 கிராமங்களில் நிலங்களை வாங்கவும், விற்கவும் கதிர்வீச்சு அச்சுறுத்தலை காரணம் காட்டி தடை விதிப்பது பெருந்தவறு ஆகும். எனவே, கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்க வேண்டும். அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையையும் மத்திய அரசு போக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story