தமிழகத்தில் மது கடைகளைகளை மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் முறையீடு


தமிழகத்தில் மது கடைகளைகளை மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் முறையீடு
x
தினத்தந்தி 19 March 2021 8:01 AM GMT (Updated: 19 March 2021 8:01 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள மது கடைகளை மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 989 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 63 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் மதுபானக்கடைகள் தான் என்றும், அந்த மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் முறையீடு செய்தார்.

இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்குகொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

Next Story