தமிழகத்தில் இதுவரை தபால் ஓட்டுக்காக 2 லட்சத்து 45 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்


தமிழகத்தில் இதுவரை தபால் ஓட்டுக்காக 2 லட்சத்து 45 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 19 March 2021 10:00 PM GMT (Updated: 19 March 2021 10:00 PM GMT)

தமிழகத்தில் இதுவரை தபால் ஓட்டுக்காக 2 லட்சத்து 45 ஆயிரம் விண்ணப் பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வாக்களிப்பதில் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதை முன்னிறுத்தி தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சில பிரிவினருக்கு தபால் ஓட்டு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் ஆகியோர் தபால் மூலம் வாக்கு செலுத்துவதற்கு வசதியாக 12-டி விண்ணப்பம் 16-ந்தேதிவரை வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள்

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர், 12 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில் அவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 849 பேர் விருப்பம் தெரிவித்ததன்பேரில் அவர்களுக்கு 12-டி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளில் 49 ஆயிரத்து 114 பேருக்கு அந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகள் யாரும் தபால் ஓட்டுக்கான விண்ணப்பத்தை பெறவில்லை.

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் ஆகியோருக்கு தபால் ஓட்டுக்கான 12-டி விண்ணப்பங்கள் அளிக்கும் பணி முடிந்துவிட்டது. அந்த வகையில் அந்தப் பிரிவினருக்கு 2 லட்சத்து 8 ஆயிரத்து 928 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2.45 லட்சம் விண்ணப்பங்கள்

தேர்தல் பணியில் உள்ள போலீசார், தேர்தல் பணியாளர்களுக்கு தபால் ஓட்டுக்காக 12-ம் எண் விண்ணப்பம் அளிக்கப்படுகிறது.

தேர்தல் பணியில் உள்ள போலீசார் 2 ஆயிரத்து 770 பேருக்கும், 33 ஆயிரத்து 189 தேர்தல் பணியாளர்களுக்கும் சேர்த்து மொத்தம் 35 ஆயிரத்து 959 விண்ணப்பங்கள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கும் தபால் ஓட்டு வசதி அளிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே, விமானப்போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து சேவையில் உள்ளவர்கள், ஊடகத்தினர் ஆகியோரும் தபால் ஓட்டு வசதியை பெறலாம்.

இவர்களும் தபால் ஓட்டுக்களை அளிப்பதற்கு 12-டி விண்ணப்பங்களை பெற வேண்டும். அந்த வகையில் 35 பேருக்கு இதுவரை இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக தமிழகத்தில் இதுவரை, 2 லட்சத்து 44 ஆயிரத்து 922 தபால் ஓட்டுக்கான 12 மற்றும் 12-டி விண்ணப் பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Next Story