கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்


கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
x
தினத்தந்தி 21 March 2021 6:53 AM GMT (Updated: 21 March 2021 6:53 AM GMT)

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென் தமிழக கடலோரம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.0 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மேலும் தென் மாவட்டங்களில் வரும் 25-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story