பொய்யான வாக்குறுதிகளை அளித்து அ.தி.மு.க. பிரசாரம் கனிமொழி எம்.பி. கண்டனம்


பொய்யான வாக்குறுதிகளை அளித்து அ.தி.மு.க. பிரசாரம் கனிமொழி எம்.பி. கண்டனம்
x
தினத்தந்தி 21 March 2021 10:21 PM GMT (Updated: 21 March 2021 10:21 PM GMT)

பொய்யான வாக்குறுதிகளை அளித்து அ.தி.மு.க. பிரசாரம் கனிமொழி எம்.பி. கண்டனம்.

கரூர், 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, நேற்று கனிமொழி எம்.பி., தரகம்பட்டியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. அறிவித்துள்ள சிறப்பான தேர்தல் அறிக்கை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அ.தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. இதனை மக்களாகிய நீங்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம்.

கடந்த ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இந்த பகுதிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தி.மு.க. ஆட்சி அமைய மக்களாகிய நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story