‘வேளாண் சட்டங்களை எப்படி ஆதரிப்பது என மோடி கற்றுத்தந்தாரா?’ எடப்பாடி பழனிசாமிக்கு ப.சிதம்பரம் கேள்வி


‘வேளாண் சட்டங்களை எப்படி ஆதரிப்பது என மோடி கற்றுத்தந்தாரா?’ எடப்பாடி பழனிசாமிக்கு ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 26 March 2021 7:54 PM GMT (Updated: 26 March 2021 7:54 PM GMT)

‘வேளாண் சட்டங்களை எப்படி ஆதரிப்பது என மோடி கற்றுத்தந்தாரா?’ எடப்பாடி பழனிசாமிக்கு ப.சிதம்பரம் கேள்வி.

சென்னை, 

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தன்னுடைய ‘டுவிட்டர்' பதிவில் கூறி இருப்பதாவது:-

இவற்றை படித்தால் வாய் கொள்ளாத சிரிப்பு வருகிறது!. மோடி எனக்கு பல விஷயங்களைக் கற்றுத்தந்தார் எனஎடப்பாடி பழனிசாமி சொன்னார். குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், வேளாண் சட்டங்களையும் எப்படி ஆதரிப்பது என்று கற்றுத்தந்தாரா?.

பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் சிறுபான்மை சமுதாயங்களை பாதுகாத்துள்ளன என ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிப் பாதுகாத்தீர்களா?.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story