'என்னுடைய போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன' தொலைதொடர்புத்துறை செயலாளரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்


என்னுடைய போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன தொலைதொடர்புத்துறை செயலாளரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்
x
தினத்தந்தி 26 March 2021 8:17 PM GMT (Updated: 26 March 2021 8:17 PM GMT)

'என்னுடைய போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன' தொலைதொடர்புத்துறை செயலாளரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்.

சென்னை, 

தி.மு.க. பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., பி.எஸ்.என்.எல். சென்னை தலைமை பொதுமேலாளர், தொலைதொடர்புத்துறை செயலாளர் ஆகியோருக்கு இ-மெயில் மூலமாக அனுப்பிய தகவலில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய செல்போன் எண் மற்றும் லேண்ட்லைன் எண்களில் ஒட்டுக்கேட்கப்படுவதாக எனக்கு பலத்த சந்தேகம் உள்ளது. சட்டவிரோதமாக போன்களில் ஒட்டுக்கேட்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டவிரோதமாக என்னுடைய போன்களில் அதிகாரிகளால் ஒட்டுக்கேட்கப்பட்டு, என்னுடைய உரிமைகள் பறிக்கப்படுமானால் உடனடியான சட்டப்பூர்வமான தீர்வுக்காக கோர்ட்டை அணுகுவதை தவிர்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story