5 மாவட்டங்களில் தொடர்ந்து உயர்வு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது


5 மாவட்டங்களில் தொடர்ந்து உயர்வு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 27 March 2021 12:15 AM GMT (Updated: 27 March 2021 12:15 AM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது.

சென்னை, 

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 84 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,195 ஆண்கள், 776 பெண்கள் என மொத்தம் 1,971 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பெரம்பலூரில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 739 பேரும், செங்கல்பட்டில் 205 பேரும், கோவையில் 173 பேரும், தஞ்சாவூரில் 111 பேரும், திருவள்ளூரில் 107 பேரும் குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, தென்காசியில் தலா 6 பேரும், தேனியில் 4 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 8 லட்சத்து 75 ஆயிரத்து 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என 9 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 3 பேரும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, திருவாரூரில் தலா ஒருவரும் என 7 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 12 ஆயிரத்து 650 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,131 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சையில் 11 ஆயிரத்து 318 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story