தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு அரணாக உள்ளது - அமைச்சர் எம்.பி.சம்பத் பிரச்சாரம்
கடலூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் எம்.பி.சம்பத் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடலூர்,
கடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தொழில்துறை அமைச்சர் எம்.பி.சம்பத் போட்டியிடுகிறார். இதனையடுத்து தேர்தலுக்கான பிரச்சார பணிகளை மேற்கொண்டு வரும் அவருக்கு, தொண்டர்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கூட்டணி கட்சியினரும் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று எம்.பி.சம்பத் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் நலனை காத்திட அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு அரணாக உள்ளது எனக் கூறிய அவர், பெண்களின் நலன் காக்க மாதம் 1,500 ரூபாய், 6 சிலிண்டர்கள், வாஷிங் மெஷின் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story