தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 28 March 2021 5:02 PM GMT (Updated: 28 March 2021 5:02 PM GMT)

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

கேரளம் மற்றும் கர்நாடகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

29.03.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

30.03.2021 முதல் 01.04.2021 வரை: தமிழகம் மற்றும புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் 2 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story