எழும்பூர்-தூத்துக்குடி, கொல்லம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


எழும்பூர்-தூத்துக்குடி, கொல்லம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 1 April 2021 1:04 AM GMT (Updated: 1 April 2021 1:04 AM GMT)

இரட்டை ரெயில் பாதை பணி அமைக்கும் நடைபெற்று வருவதால் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதுரை-விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக கீழ்கண்ட ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* நாகர்கோவில்-தாம்பரம் (வண்டி எண்:06066) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் இன்று (1-ந்தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* நாகர்கோவில்-கோவை (02667) சிறப்பு ரெயில் நாகர்கோவில்-மதுரை இடையிலும், தூத்துக்குடி-எழும்பூர் (02694) முத்துநகர் சிறப்பு ரெயில் தூத்துக்குடி-மதுரை இடையிலும், கொல்லம்-எழும்பூர் (06724) சிறப்பு ரெயில் கொல்லம்- மதுரை இடையிலும், நாகர்கோவில்-கோவை (06321) சிறப்பு ரெயில் நாகர்கோவில்-மதுரை இடையிலும், கோவை-நாகர்கோவில் (06322) சிறப்பு ரெயில் மதுரை-நாகர்கோவில் இடையிலும் இன்று (1-ந்தேதி) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story