தொடர் விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்...


தொடர் விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்...
x
தினத்தந்தி 4 April 2021 3:55 AM GMT (Updated: 4 April 2021 3:55 AM GMT)

தொடர் விடுமுறை எதிரொலியாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, வாக்குப்பதிவு நடை பெறுவதையொட்டி இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் 6-ம் தேதி (செவ்வாய்கிழமை) வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று மாலை முதல் மது வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. 

நேற்று பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்ததில் இருந்தே ஏராள மானோர், 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால், டாஸ்மாக் கடைகளில் நேற்று நாள் முழுவதும் மது அருந்துவோரின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

Next Story