மோடியை தங்கள் தலைவராக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டுவிட்டார்களா? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு


மோடியை தங்கள் தலைவராக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டுவிட்டார்களா? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 5 April 2021 6:02 PM GMT (Updated: 5 April 2021 6:02 PM GMT)

தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திரமோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ ஒழிக்கவே பா.ஜ.க. இங்கு வந்திருக்கிறது என்று பா.ஜ.க. தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். சனாதன தர்மம் என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார். தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார்.

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா. தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை?.

தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திரமோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story