ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு கொரோனா வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்


ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு கொரோனா வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்
x
தினத்தந்தி 9 April 2021 12:07 AM GMT (Updated: 9 April 2021 12:07 AM GMT)

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு கொரோனா வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பெருந்தகை (வயது 55). இவர் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.

இதற்காக சட்டமன்ற தேர்தலையொட்டி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

செல்வ பெருந்தகையுடன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்வதுடன் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவர் ஓட்டுளித்த, வாக்குச்சாவடி அலுவலர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story