அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்,
கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை சேலம் அரசு மருத்துவமனையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செலுத்திக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- “ தமிழகத்தில் 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் போதுமான அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story