கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக புதிய அறிவிப்பு - புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 10 April 2021 3:35 PM GMT (Updated: 10 April 2021 3:35 PM GMT)

சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. நாளை முதல் இந்த புதிய கட்டுப்பாடு அமலுக்கு வர உள்ளது. 

அதேவேளையில்,  வழிபாட்டு  தலங்களில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி  இல்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அதேபோல், புதிய திரைப்படங்களை கூடுதலாக ஒரு காட்சி  திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  7 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story