தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது; நாஞ்சில் சம்பத் பேட்டி


தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது; நாஞ்சில் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 11 April 2021 2:53 AM GMT (Updated: 11 April 2021 2:53 AM GMT)

தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று நாகையில், நாஞ்சில் சம்பத் கூறினார்.

நாகை வந்த நாஞ்சில் சம்பத், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆளுமை திறனை நிரூபித்துள்ளார்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருணாநிதி பெற்ற வெற்றிகளை தாண்டி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரலாறு படைப்பார்.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்படாமல் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை சரியான முறையில் பங்கீடு செய்து கொடுத்து ஸ்டாலின் தனது ஆளுமை திறனை நிரூபித்துள்ளார்.

தி.மு.க. வெற்றி உறுதி
தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு கிராமசபை கூட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல்வேறு கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டு எல்லா தொகுதி மக்களையும் சந்தித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வழிவகை செய்தது பாராட்டத்தக்கது. எனவே தி.மு.க வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி தேர்தல் நேரத்திற்கான கூட்டணி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நான் இனி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என கூறினார். ஆனால் அவரது பெயரை சொல்லி கட்சியை நடத்துபவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story