தமிழகத்தில் மேலும் 6,711- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் இன்று மேலும் 6,711 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: -தமிழகத்தில் மேலும் 6,711- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2,105- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றில் இருந்து இன்று 2,339- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒருநாளில் மட்டும் 82 ஆயிரத்து 202 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story