தமிழ், மலையாள புத்தாண்டு தினம்: முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து
தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டு தினங்களை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் சித்திரை மாத பிறப்பினையொட்டி தொடங்கும் வருஷ பிறப்பன்று நாளை தமிழகம் முழுவதும் மக்களால் தமிழ் புத்தாண்டு தினம் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழர்களின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும். ஆதிமனிதன் தமிழன்தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன் என்ற கவிஞர் பாரதிதாசனின் கவிதையை மேற்கோள் காட்டி முதல்வர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகையை முன்னிட்டும் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். மலையாள மொழி பேசும் மக்களின் வாழ்வில் அன்பும் மகிழ்ச்சியும் மலரட்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story