சி.பி.எஸ்.இ. தேர்வு போன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சி.பி.எஸ்.இ. தேர்வு போன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 April 2021 3:57 PM GMT (Updated: 15 April 2021 3:57 PM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கவை. கொரோனா காலத்தில் மாணவர் நலன் கருதி, எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இதுவாகும்.சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பா.ம.க. தான் குரல் கொடுத்தது. அந்த வகையில் மத்திய அரசின் நடவடிக்கை பா.ம.க.வுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்ய வேண்டும், குறைந்தபட்சம் சி.பி.எஸ்.இ. போன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

 


Next Story