கொரோனா பரவல் அதிகரிப்பு: வேளாண் அலுவலர் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்; டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையில் அலுவலர்கள், உதவி இயக்குனர்கள் 991 பேரை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 17, 18, 19 ஆகிய நாட்களில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இத்தேர்வுகளை நடத்துவது உகந்தது அல்ல.
கொரோனா பரவல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலும், போட்டித் தேர்வர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story