நடிகர் விவேக் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது - தொல்.திருமாவளவன்
நடிகர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் விவேக் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
#நடிகர்_விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 17, 2021
அவருடைய மறைவு
பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது.
தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே #அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அவருக்கு எமது அஞ்சலி. pic.twitter.com/SswDq6L5ix
Related Tags :
Next Story