விவேக் சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர் - திமுக எம்.பி., கனிமொழி இரங்கல்
சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர் நடிகர் விவேக் என திமுக எம்.பி., கனிமொழி எம்.பி., இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை விருகம்பாக்கத்துல் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ள நடிகர் விவேக் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விவேக்கின் மரணத்துக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்
திமுக எம்.பி., கனிமொழி தனது டுவிட்டர் பதிவில்,
'நடிகர் பத்மஸ்ரீ. விவேக் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் பத்மஸ்ரீ. விவேக் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். (1/2)#Vivekpic.twitter.com/okTVlyJB23
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 17, 2021
சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். (2/2)#Vivek
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 17, 2021
Related Tags :
Next Story