கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் நிலை உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் நிலை உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
x

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் நிலை உதவி ஆய்வாளர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சென்னை காவல்துறையில் கொரோனா முதல் அலையில் 3,300 பேர் பாதிக்கப்பட்டு மீண்டனர். தற்போது பரவி வரும் 2-வது அலையில் சென்னை காவல் துறையில் 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் சென்னை யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல்  கடந்த 9-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் கொரோன தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story