இரவு நேர ஊரடங்கு பணி: ‘பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்’ போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை


இரவு நேர ஊரடங்கு பணி: ‘பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்’ போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை
x
தினத்தந்தி 21 April 2021 7:50 PM GMT (Updated: 21 April 2021 7:50 PM GMT)

இரவு நேர ஊரடங்கு பணி: ‘பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்’ போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை.

சென்னை, 

சென்னையில் இரவு நேர ஊரடங்கு பணிகளில் பொதுமக்களிடம் எந்தவிதத்திலும் கெடுபிடியாக நடக்க வேண்டாம் என்று போலீசாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

இரவு நேர ஊரடங்கில் கண்காணிப்பு பணியில் கவனம் செலுத்தும் அதேவேளை, பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அரசின் வழிகாட்டு நடைமுறைகளுக்குட்பட்டு உரிய தேவைகள் மற்றும் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக செல்லும் பொதுமக்களை அனுமதிக்கலாம். அதுவும் உரிய ஆவணங்களை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் போன்ற அறிவுரைகளையும் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ‘வாக்கிடாக்கி’ கருவி மூலம் போலீசாருக்கு வழங்கியுள்ளார்.

மேலும் இரவு நேர ஊரடங்கில் பொதுமக்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பொதுமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story