அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வரும் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு


அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வரும் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
x

அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வரும் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு உடல்நலம் விசாரித்தார்.

சென்னை, 

குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 19-ந்தேதி சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு நாள் மருத்துவமனையில் இருந்த அவர், அதன் பிறகு வீடு திரும்பினார். ஆனால், டாக்டர்கள் அவரை 3 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று அவரிடம் உடல்நலம் விசாரித்தார். விரைவில், அன்றாட பணிக்கு திரும்பவும் விருப்பம் தெரிவித்தார்.

Next Story