2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க.ஸ்டாலின்


2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 April 2021 11:29 PM GMT (Updated: 22 April 2021 11:29 PM GMT)

2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க.ஸ்டாலின் மற்றவர்களும் போட்டுக்கொள்ள வேண்டுகோள்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ந்தேதி, முதல் தவணை கொரோனா தடுப்பூசி மருந்தை போட்டுக்கொண்டார். அவருக்கு, ‘‘கோவேக்சின்’’ தடுப்பூசி மருந்து போடப்பட்டது. தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், கடந்த வாரம் கொடைக்கானலுக்கு குடும்பத்தினருடன் சென்று ஓய்வெடுத்தார். நேற்று முன்தினம் அவர் சென்னை திரும்பிய நிலையில், நேற்று காலை 2-வது தவணை கொரோனா தடுப்பூசி மருந்தை போட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

2-வது தவணை கோவேக்சின் இன்று எடுத்துக்கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story