தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு: மீன்கள் வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வம்
கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்ததால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. சென்னையில் மிகப்பெரிய மீன்பிடி சந்தையான காசிமேடு துறைமுகத்தில், மீன் வாங்குவதற்காக இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும், மீன் வாங்குவதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளனர். இதனால் காசிமேடு மீன் சந்தையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story