கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் சாவு


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் சாவு
x

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்டம் புவனகிரி பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (வயது 25). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சிறு வயதில் இருந்தே வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் வேலை பார்த்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் சிவப்பிரகாஷ், முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பரபரப்பு

இந்த நிலையில் நேற்று காலையில் சிவப்பிரகாஷ், வீட்டில் இருந்தபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவப்பிரகாசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிவப்பிரகாசின் உடலை முழுமையாக பரிசோதனை செய்த பின், கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று உறவினர்கள் தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாளில் தனியார் நிறுவன ஊழியர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story