கர்நாடகாவில் முழு ஊரடங்கு: வேலூரில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் 38 பஸ்கள் இன்று முதல் நிறுத்தம் - அதிகாரிகள் தகவல்


கர்நாடகாவில் முழு ஊரடங்கு: வேலூரில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் 38 பஸ்கள் இன்று முதல் நிறுத்தம் - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 26 April 2021 9:27 PM GMT (Updated: 26 April 2021 9:27 PM GMT)

கர்நாடகாவில் முழு ஊரடங்கு: வேலூரில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் 38 பஸ்கள் இன்று முதல் நிறுத்தப்படுகிறது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வேலூர், 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். 

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணி முதல் மே 10-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலூரில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வேலூரில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் 38 பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இந்த பஸ்கள் இன்று மதியம் 1 மணிக்கு பின்னர் இயக்கப்படாது. மேலும் தேவை ஏற்பட்டால் பொதுமக்களின் நலனுக்காக ஓசூர் வரை பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என்றனர்.

Next Story