வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர் ; இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை அதிமுக வேட்பாளர் புலம்பல்
காங்கேயத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர், உடனடியாக அகற்றப்பட்டது
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெள்ளக்கோவில் சாமிநாதனும், அதிமுக சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கமும் போட்டியிட்டனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் சுமார் 13ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பழையக்கோட்டைபுதூர் பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அலுவலருக்கு தகவல் அளித்த நிலையில், பேனர் உடனடியாக அகற்றப்பட்டது.
இதுதொடர்பாக அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் கூறும்போது, இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆர்வமிகுதியால் செய்தார்களா அல்லது என் பெயரை கெடுக்கும் நோக்கில் செய்தார்களா என்பது புரியவில்லை. கட்சிக்காரர்களிடம் விசாரித்தபோது, அவர்களும் தெரியவில்லை என்று கூறினர். திருப்பூர்மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளிக்க இருக்கிறேன்" என கூறினார்.
Related Tags :
Next Story