திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 April 2021 5:00 PM GMT (Updated: 29 April 2021 5:00 PM GMT)

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ரிபப்ளிக் சி.என்.எக்ஸ், ,இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என கணித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று முடிவடைந்ததால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியானது. இன்று வெளிவந்த கருத்துக் கணிப்புகள் அனைத்திலுமே தமிழகத்தில் திமுக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story