தமிழகத்தில் நேற்று மட்டும் 20,952 பேருக்கு கொரோனா; 122 பேர் பலி


தமிழகத்தில் நேற்று மட்டும் 20,952 பேருக்கு கொரோனா; 122 பேர் பலி
x
தினத்தந்தி 3 May 2021 7:58 PM GMT (Updated: 3 May 2021 7:58 PM GMT)

தமிழகத்தில் புதிதாக 20,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 12,345 ஆண்கள், 8,607 பெண்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 17 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 748 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,002 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,150 பேரும், செங்கல்பட்டில் 1,618 பேரும், கோவையில் 1,566 பேரும், திருவள்ளூரில் 1,207 பேரும், காஞ்சீபுரத்தில் 835 பேரும், தூத்துக்குடியில் 707 பேரும் குறைந்தபட்சமாக அரியலூரில் 45 பேரும், பெரம்பலூரில் 39 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

12,28,064 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 12 லட்சத்து 28 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 76 பேரும், தனியார் மருத்துவமனையில் 46 பேரும் என 122 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 38 பேர் உயிரிழப்பு

அந்தவகையில் நேற்று சென்னையில் 38 பேரும், மதுரையில் 16 பேரும், காஞ்சீபுரத்தில் 10 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், கன்னியாகுமரி, நெல்லையில் தலா 5 பேரும், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருச்சி, வேலூரில் தலா 4 பேரும், கோவை, சேலத்தில் தலா 3 பேரும், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், விருதுநகரில் தலா 2 பேரும், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 27 மாவட்டங்களில் 122 உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரத்து 468 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

18,016 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 18,016 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story