பரவல் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது: தமிழகத்தில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு


பரவல் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது: தமிழகத்தில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 8:01 PM GMT (Updated: 4 May 2021 8:01 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 34 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 12,450 ஆண்கள், 8,778 பெண்கள் என மொத்தம் 21 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்து தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் சங்கிலி நீண்டு கொண்டே போவது தெரியவந்துள்ளது.

நேற்று கொரோனா பாதித்தோர் பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 790 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,879 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,228 பேரும், செங்கல்பட்டில் 1,608 பேரும், கோவையில் 1,509 பேரும், திருவள்ளூரில் 1,152, மதுரையில் 787 பேரும், நெல்லையில் 719 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 35 பேரும், பெரம்பலூரில் 31 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

12,49,292 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 992 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 53 ஆயிரத்து 945 ஆண்களும், 4 லட்சத்து 95 ஆயிரத்து 309 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 44 ஆயிரத்து 921 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 74 ஆயிரத்து 123 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

144 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 86 பேரும், தனியார் மருத்துவமனையில் 58 பேரும் என 144 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில் நேற்று சென்னையில் 36 பேரும், சேலத்தில் 15 பேரும், திருவள்ளூரில் 12 பேரும், வேலூரில் 11 பேரும், காஞ்சீபுரத்தில் 8 பேரும், கடலூரில் 7 பேரும், செங்கல்பட்டு, மதுரையில் தலா 5 பேரும், கோவை, திருப்பத்தூர், திருச்சியில் தலா 4 பேரும், கன்னியாகுமரி, கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் தலா 3 பேரும், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தேனி, தூத்துக்குடி, விருதுநகரில் தலா 2 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், நெல்லை, திருப்பூரில் தலா ஒருவரும் என 28 மாவட்டங்களில் 144 உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரத்து 612 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

19,112 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,112 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 11 லட்சத்து 9 ஆயிரத்து 450 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 230 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story