நாளை பதவி ஏற்பு : அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களது இல்லங்களுக்கே சென்று வாழ்த்துப் பெற்ற மு.க ஸ்டாலின்


நாளை பதவி ஏற்பு : அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களது இல்லங்களுக்கே சென்று வாழ்த்துப் பெற்ற மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 6 May 2021 11:59 AM GMT (Updated: 6 May 2021 11:59 AM GMT)

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சென்னை:

சட்டசபை தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவை ஆட்சியமைக்க வருமாறு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்ததை அடுத்து, நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை ( மே 7) காலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவிப் பிரமாணம் எடுத்துகொள்ள உள்ளனா்.


தமிழக முதல் அமைச்சராக நாளை பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.



இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா இல்லத்துக்கு நேரில் சென்று மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். ஸ்டாலினுடன்  துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆ. ராசா, கே.என்.நேரு, க. பொன்முடி ஆகியோர் இருந்தனர்.

பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.



தொடர்ந்து, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் இல்லத்துக்கு நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன்  ஆர்.எம். வீரப்பன் குடும்பத்தினர் இருந்தனர்.

Next Story