முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து ஓய்வு


முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து ஓய்வு
x
தினத்தந்தி 8 May 2021 4:17 PM GMT (Updated: 8 May 2021 4:17 PM GMT)

கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவிலில் சாமிகும்பிட்ட முதல்அமைச்சர் ரங்கசாமி தனது வீட்டில் ஓய்வு எடுத்தார்.

புதுச்சேரி, மே.9-
கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவிலில் சாமிகும்பிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி   தனது வீட்டில் ஓய்வு எடுத்தார். 
உடல்நலக்குறைவு 
புதுவை முதல்-அமைச்சராக    பதவி    ஏற்பதற்கு முந்தைய நாள்  இரவு  ரங்க சாமிக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருந்தாலும் திட்டமிட்டபடி முதல்- அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். உடனே அவர் சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். சிறிது நேரமே இருந்த அவர் அங்கிருந்து உடனடியாக வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கேயே அவர் ஓய்வெடுத்தார்.
சாமிகும்பிட்டார் 
டாக்டர்களின்    ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளை ரங்கசாமி எடுத்துக்  கொண்டார். வீட்டை விட்டு வெளியேறாமல் நேற்றும் அவர் ஓய்வெடுத்தார். பிற்பகலில் அப்பா பைத்தியசாமி கோவிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்டு சாமி கும்பிட்டுவிட்டு   பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமே‌‌ஷ், பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, பிரகா‌‌ஷ்குமார் மற்றும் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் வீட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து ஓய்வெடுத்தார்.
ஏற்கனவே ரங்கசாமியுடன் இருந்த என்.ஆர்.காங்கிரசார் சிலருக்கு  தொற்று   உறுதி செய்யப்பட்டுள்ளது.    எனவே அவரது வீட்டிற்குள்    யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Next Story