முழு ஊரடங்கால் சொந்த ஊர் பயணம் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு ரூ.38 லட்சம் அபராதம்


முழு ஊரடங்கால் சொந்த ஊர் பயணம் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு ரூ.38 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 11 May 2021 1:07 AM GMT (Updated: 11 May 2021 1:07 AM GMT)

முழு ஊரடங்கால் சொந்த ஊர் பயணம் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு ரூ.38 லட்சம் அபராதம்.

சென்னை, 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக முழு ஊரடங்கு 10-ந் தேதி (நேற்று) காலை 4 மணி முதல் 24-ந் தேதி காலை 4 மணி வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் சொந்த ஊர் திரும்பும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி காலை 11.30 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை கூடுதல் தலைமைச்செயலாளர் போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர் தலைமையில் மாநிலத்தின் முக்கிய சாலைகளில் பல்வேறு குழுக்களாக தனியார் பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் அதிக கட்டணம் வசூலித்த வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 304 ஆம்னி பஸ்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் அபராதமாக ரூ.10 லட்சத்து 92 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது. அபராத வரியாக ரூ.27 லட்சத்து 20 ஆயிரத்து 290 வசூலிக்கப்பட்டது. 25 ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டது.

ஆக மொத்தம் அபராத கட்டணம் மற்றும் அபராத வரியாக அரசுக்கு மொத்தமாக ரூ.38 லட்சத்து 12 ஆயிரத்து 890 வசூல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளது.

Next Story