ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று
ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்திருந்த நிலையில், இரண்டாவது அலையின் காரணமாக கொரோனாவின் கோரதாண்டவம் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதல் உதவி சிகிச்சை பெற்றுக் கொண்ட பின்னர் உடனடியாக அவர் இரவோடு இரவாக மதுரை சென்று தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story