298 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் 29,272 பேருக்கு கொரோனா


298 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் 29,272 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 May 2021 12:14 AM GMT (Updated: 12 May 2021 12:14 AM GMT)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 298 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும், 29,272 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 717 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16,983 ஆண்கள், 12,289 பெண்கள் என மொத்தம் 29 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 1,002 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,263 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7,466 பேரும், கோவையில் 2,650 பேரும், செங்கல்பட்டில் 2,419 பேரும், திருவள்ளூரில் 1,204 பேரும், மதுரையில் 1,024 பேரும், கன்னியாகுமரியில் 995 பேரும், ஈரோட்டில் 925 பேரும், திருச்சியில் 879 பேரும், நெல்லையில் 768 பேரும் குறைந்தபட்சமாக அரியலூரில் 106 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

298 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 38 லட்சத்து 53 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 14 லட்சத்து 38 ஆயிரத்து 509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 64 ஆயிரத்து 753 ஆண்களும், 5 லட்சத்து 73 ஆயிரத்து 718 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 51 ஆயிரத்து 369 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 லட்சத்து 605 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 192 பேரும், தனியார் மருத்துவமனையில் 106 பேரும் என 298 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 92 பேர் பலி

அந்தவகையில் நேற்று சென்னையில் 92 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 19 பேரும், சேலத்தில் 18 பேரும், திருவள்ளூரில் 17 பேரும், மதுரையில் 13 பேரும், நாகப்பட்டினத்தில் 11 பேரும், தஞ்சாவூர், கன்னியாகுமரியில் தலா 10 பேரும், காஞ்சீபுரத்தில் 9 பேரும், தேனி, வேலூரில் தலா 8 பேரும், திருச்சியில் 7 பேரும், கடலூர், கரூர், நெல்லையில் தலா 6 பேரும், திருப்பூரில் 5 பேரும், ஈரோடு, தென்காசியில் தலா 4 பேரும், திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடியில் தலா 3 பேரும், நாமக்கல், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகரில் தலா 2 பேரும், தர்மபுரி, திருவண்ணாமலை, சிவகங்கையில் தலா ஒருவரும் என 31 மாவட்டங்களில் 298 உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதில் இணை நோய் அல்லாத 78 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16 ஆயிரத்து 178 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

19,182 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,182 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,583 பேரும், கோவையில் 1,723 பேரும், செங்கல்பட்டில் 2,366 பேரும் அடங்குவர். இதுவரையில் 12 லட்சத்து 60 ஆயிரத்து 150 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 181 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story