ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையிலும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு உத்தரவு
ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையிலும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு உத்தரவு.
சென்னை,
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் சவான் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா உதவித்தொகையின் முதல் தவணைத்தொகையான ரூ.2 ஆயிரம், அனைத்து அரிசி பெறும் குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த தொகை வருகிற 15-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். ரேஷன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றாலும், கொரோனா நிவாரணத்தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதால் 16-ந் தேதியன்று (காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
அந்த நாளிலும் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். இதற்கான விடுமுறை நாள் பின்பு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story