சென்னையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா சிகிச்சை மையம்
சென்னையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது.
சென்னை,
சென்னையில் கொரோனாவின் பிடியில் சிக்குவோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளே இல்லை என்ற சூழலே நிலவுகிறது. இதனால் நகரில் தற்காலிக சிகிச்சை மையங்கள் வேகவேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story