தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 May 2021 3:38 PM GMT (Updated: 16 May 2021 3:38 PM GMT)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,98,216 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 311 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 21,317 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,61,204 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2,19,342 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 6,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story